மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .

மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .


" alt="" aria-hidden="true" />


உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு விதித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா வைரஸ் நிவாரணம் அறிவிப்பின்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 மட்டும் ஏப்ரல் மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பயன்பெறும் வகையில், அவர்களின் குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரையை விலையின்றி வழங்கப்படும்.


அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தெருவழியாக உள்ள குடும்ப அட்டைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் நிவாரணத் தொகை பெறும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில்‌ நிவாரண தொகை மற்றும் உணவுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலூகா மானியதள்ளி கிராமத்தில் சுமார் 1200 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


கொரோனா‌ வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியாய விலை கடையில் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், பொருட்களை வாங்குவதற்கு முன் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கட்டாயம் தங்கள் கைகளை கழுவிவிட்டு பின்பு நிவாரண தொகைமற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் எனவும் ‌ கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவதை தடுக்க சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் ‌‌என‌ நியாய விலை கடை உரிிமையாளர் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் நிவாரண தொகை ₹1000 மற்றும் உணவு பொருட்களை வாங்கிச் சென்றனர்.


Popular posts
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்
Image
144 தடை போட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் சென்னை
Image
நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கினார் நாமக்கல் MP. AKP.சின்ராஜ் அவர்கள்
Image